Saturday, December 30, 2006

Ponneri Taluk

நோபல் கவி தாகூர் சொன்னது போல,"கடவுள் படைக்கும் எதற்கும் மனிதன் தன் முயற்சியால் அழகு சேர்க்க விழைகிறான்". அப்படி அழகு சேர்க்க விழைந்த பண்டைய மனிதன் தான் லெமூரியக் கண்டமாக இருந்த தென் இந்தியாவை பல மாநிலங்களாக்கி அழகு பார்த்தானோ. அப்படி கூறு போடப்பட்ட மாநிலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது தமிழ்நாடு. மொழியாலும், கலாச்சாரத்தாலும், கூட்டுக்குடும்ப முறையாலும் உலக நாடுகலால் கவனிக்கப்பட்ட நாடு இது. "கல்வியிற் சிறந்த தமிழ் நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு", என பாரதி பாடியது போல - கல்வியிலும் சிறந்த நாடு இது.
சில வாரங்கலுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வுக்கூடம் பேசும் தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோளை மற்ற கிரகங்களுக்கு அனுப்பியது. அதில் தமிழ் மொழியும் ஒன்று. சிறப்பு என்னவெனில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.
இது உலக கலாச்சாரத்தின் நுழைவு வாயிலான சென்னை, பட்டு சேலை, கோயில், சிற்பக் கலை மற்றும் ஆதிசங்கரரால் நேரடியாக நிர்மானிக்கப்பட்ட மடம் ஆகியவற்றால் சிறப்பு பெற்ற காஞ்சி, மலைகலாலும், வான் ஆராய்ச்சி தொலை நோக்கியுள்ள இடமாகவும், நவாப் வம்சம் வாழ்ந்த இடமாகவும் அறியப்படும் வேலூர், வங்காள விரிகுடா, மற்றும் ஆந்ரா மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது.
திருத்தனி முருகன் கோவில், ஆசியாவிலேயே பெரிய சட்டமன்ற தொகுதியான வில்லிவாக்கம், ஆவடி Tank Factory , அம்பத்தூர் தொழிற்பேட்டை, என்னூர் உப்பங்கழி, நீர்மின் நிலையம், பழவேற்காடு பறவைகள் சரணாலயம், மாதவரம் பால் பண்ணை என பல சிறப்புகள் இருந்ததளும் - வேறு மாவட்டத்திற்கு இல்லாத சிறப்பு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உண்டு. அது என்னவெனில் - முதன்முதலாக தாலுகா அலுவலகமும்(taluk Office), பஞ்சாயத்து அலுவலகமும் (BDO Office) தனித்தனியே தொடங்கப்பட்ட மாவட்டம் இது.
இந்த மாவட்டத்தின் மூன்று கோட்டங்களில் பொன்னேரியும் ஒன்று. மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு ஊராச்சிகள் பொன்னேரி தாலுகாவில் அடங்கும். இந்த மூன்று ஊராச்சிகளின் தலைமையிடமாக ம்ட்டுமன்றி, மூன்று நீதிமன்றம், பதிவாளர் அலுவலகம், அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, அரசு ஆடவர் பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வருவாய் அலுவலகம், மாவட்ட கிளை நூலகம் என சுற்றியுள்ள 80 கிராமங்கள் கூடும் இடமாகவும் உள்ளது.
இனி வரும் கட்டுரைகளில் 2 கி.மீ சதுர பரப்பு கொண்ட பொன்னேரி பற்றியும், அதை சுற்றியுள்ள சுற்றுலா தளம், மற்றும் இதர சிறப்பான தகவல்கலை பகிர்ந்துகொள்வோம்.
மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ண பிரபு,
பஞ்செட்டி.