Sunday, January 14, 2007

Arani River

உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஆற்றங்கறை நாகரீகமும் ஒன்று. பொன்னேரி ஆற்றங்கறை நாகரீகத்தை அடிப்படையாகக்கொண்டது. பொன்னேரி சிவன் கோவிலுக்கு பின்புறம் ஆரணியாறு ஓடுகிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டையில் இருந்து ஆரம்பமாகிறது.
ஆந்ராவில் இருந்து பாயும் கிருஷ்ணா நதி ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழகத்தில் நுழைகிறது. ஊத்துக்கோட்டையில் இருந்து இந்த நதி கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என இரண்டாக பிரிந்து கடலில் சென்று சங்கமமாகிறது.
கொடுதலை ஆறு சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கிறது. சேமிக்கப்போக மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாளம், நாபாளத்து பாளம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
ஆரணி ஆறு பெரியபாளயத்தில் குடிகொண்டுள்ள பவானி அம்மனின் சன்னிதானத்தின் வழியாக பாய்ந்தோடி பொன்னேரி சிவன் கோவிலின் வழியாக பெரும்பேடு முருகன் கோவிலை கடந்து சென்று வங்காள விரிகுடாவில் சங்கமமாகிறது. பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு எனும் இடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்காக அணை கட்டி தண்ணீரை சேமித்து சுற்றிலுமுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுமாறு செய்துள்ளனர்.
பொன்னேரி ஆற்றங்கரை ஓரமாக கும்மனஞ்சேரிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் தொழு நோயாளிகளுக்கு அரசாங்கம் குடில் தந்து அவர்களை பராமரிக்கிறது. பெரும்பேடு முருகர் சிலை இந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததாகவும், கிடைத்த சிலையை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் கட்டி வழிபடுவதாகவும் என் பாட்டி கூறுவாள்.

என் பாட்டியின் பால்யகாலத்தில் சித்திரை மாதத்தில் கூட முழங்கால் அளவிற்கு பொன்னேரி ஆற்றில் தண்ணீர் ஓடிப் பாயுமென கூறுவாள். ஆனால் இன்று மழைகாலத்தில் கூட சில நாட்களுக்கு மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீரை பார்க்கமுடிகிறது.
ஒரு நாட்டின் உண்மையான மதிப்பே(belongings) அந்நாட்டின் இயற்கை வளங்களான காடு, மலை மற்றும் வற்றாத ஜீவ நதிகள் மட்டுமே. பல காலமாக தான் ஓடிப்பாயும் இடத்தை சுற்றியுள்ள பல கிராமவாசிகளுக்கு பயனளித்த இந்த ஆறு பொய்த்துப்போக காரணம் மக்களின் அறியாமையும், அரசாங்கத்தின் கவனக்குறைவும் மட்டுமே.
மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ண பிரபு.

Sunday, January 7, 2007

God Siva temple in ponneri

என்னுடைய பாட்டி வீட்டில் தினமும் சிவ பூஜை இருக்கும். பூஜைக்கு தேவையான பூக்களை தினமும் அதிகாலையில் நான் பறித்து பாட்டியிடம் கொடுப்பேன். பாட்டி பூவை மாலையாக்கி இறைவனுக்கு படைப்பார்கள். மீதமுள்ள மலர்களை அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் எடுத்துச்செல்வேன். பண்டைய கால அரசர்களால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த கோவில் இது. காற்றில் இலை அசையும் சப்தமும், தன்னுடைய குஞ்சுகளுக்கு தீனி கொண்டுவரும்போது பறவைகள் எழுப்பும் இறைச்சலும் கடவுளுக்கு கேட்குமெனில் நானும் அமைதியுடன் கூடிய சப்தத்துடன் கோவிலுக்கு சென்ற காலடி ஓசைகூட கடவுளுக்கு கேட்டிருக்குமோ?. நல்ல கோடையில் கூட கோவிலுக்குள் உள்ள குளுமை என்னை ஆச்சர்யமூட்டும். பண்டிகை நாட்களில் இந்த கோவிலுக்குள் போகவே முடியாது. எனக்கு எங்கேயும் வராத குரோதம் அங்கேதான் வரும். ஏதோ அமைதியான இடம் என்று மன அமைதிக்காக வரலாம் தவறு இல்லை. வாழ்க்கையில வணக்கம் போட்டு போட்டே முன்னேற நினைகும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அப்படி வணக்கம் போடுகிறவர்களுக்கு பண்டிகையென்று தெரியவரும் போது சிவன் மேல் உள்ள மரியாதை மிகவும் கூடிவிடும். அதை தவறு என்றும் சொல்வதற்கில்லை. எல்லாருக்குமே அதில் ஒரு இனம் புரியாத நிம்மதி.
கோவிலுக்குள் சென்றதும் முதலில் சிவ தரிசனம் கிடைக்கும். அவருக்கு அருகில் அம்மன் தரிசனம் பிறகு ஆழ்வார்கள், சூரிய பகவான், வினாயகர், தக்ஷணா மூர்த்தி, பிரம்மா, அபிதகுஜாம்பாள், முருகர் - வள்ளி, தெய்வானையுடன், ஆஞ்சநேயர், ஐயப்பன், கடைசியாக பைரவர் என்று சுற்றி சிவனிடம் வந்து சேரலாம். என் பாட்டி சொல்லிய இதிகாச கதைகளை சொல்ல வேண்டுமெனில் சுதா மூர்த்தி எழுதியதைப்போலவே "பாட்டி சொன்ன கதைகள்" என ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.
கோவிலுக்குள் ஒரு பாதாள அறை செல்கிறது. இதுவரை அதனுள் சென்றவறில்லை என பாட்டி சொல்லுவாள். எனினும் பண்டைய காலத்தில் பகைவர்களிடமிருந்து தப்பிச்செல்ல முன் யோசனையுடன் கட்டப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம். எந்த கோடையிலும் வற்றாத பெரிய குளம் கோவிலுக்கு வெளியில் உள்ளது. இந்த குளத்திற்குள் ஏழு குளம் உள்ளதாகவும் அது பாதாளத்தில் சென்று முடிவதாகவும் பாட்டி கூறுவாள். பண்டைய கால அரசாட்சியில் குளத்திற்கு 100 அடிக்குள் மனித கழிவுகளை வெளியேற்றுபவர்களுக்கு அதிகபட்சமாக சிறைதண்டனை வரை உண்டு. ஆனால் இன்று மக்களாட்சி என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் மக்களால் மக்களுக்காக நடைபெறும் மக்களாட்சியில் மக்களின் வசதிக்காக செய்துகொள்ளும் எதுவும் தவறில்லை. இல்லையெனில் அடுத்த மக்களாட்சி வேறு மனிதர்களால் ஆட்சி செய்யப்படும். இந்த குளத்தின் அருகில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் சொல்லித்தருகிறார்கள். பெண்கள் கூட சிலம்பு பயிற்சி செய்வதை நான் நேரில் பார்த்ததுண்டு. கோவிலுக்கு பின்னால் ஆரணி ஆறு செல்கிறது. ஆறுடன் சேர்ந்து அடுத்த கட்டுரையில் பயணம் செய்வோம்.
அன்புடன்,
கிச்சா,

Monday, January 1, 2007

My First Visit

பொன்னெரின்னு சொன்னாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவதே அம்பிகா காப்பிதூள். என் அம்மாவுக்கு அம்பிகா காப்பின்னா உயிர் மாதிரி. பாட்டி கதையில வருமே. ஒரு ராட்சஷன் இருந்தானாம் அவன் உயிரு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு கிளியோட உடம்புல இருக்குன்னு.... அந்த மாதிரி எங்கம்மா உயிரு அம்பிகா காப்பி பொடியில இருக்குது. என் சின்ன வயசுல அம்மா காப்பிபொடி வாங்க பொன்னேரி அனுப்புவா. போயிட்டு வரவும், காபிதூள் வாங்கவும் மட்டும் தான் அம்மா பைசா தருவா. அதனால பைசாவ தொலச்சிட கூடாது கடவுலேன்னு வேண்டிக்குனே நேரா கடைக்கு போய் காப்பித்தூள் வாங்கிக்குனு வந்துடுவேன். அப்படி இப்படி திரும்பம வீட்டுக்கு வந்துடுவேன். சீக்கிரமே வந்துட்டயேடா சமத்துன்னு எங்கம்மா பாராட்டுவாங்க. என்னுடைய பயம் அவங்களுக்கு தெரிஙஞ்சிருக்க ஞாயம் இல்ல. பிறகு என்னுடைய பத்தவது படிப்பு முடிச்சவுடனே பொன்னேரி ஸ்கூல்ல admission கிடைத்தது. பிறகு தினமும் பொன்னேரி போய் படிச்சிட்டு வருவேன். அப்பதான் என் சின்ன பாட்டி பொன்னேரியில இருக்க விஷயமே தெரிஞ்சது. இங்கயே தங்கி படிடான்னு பாட்டி சொன்னாங்க. சரின்னு அங்கயே தங்கி படிக்க ஆரம்பமாச்சி. பொதுவா நான் கிராமத்து ஆளு.... டவுன் வாழ்கைய அனுசரிச்சி போக ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். எவ்ளோ வண்டிங்க, எவ்ளோ மக்கள், அதனால எழும்புற தூசு.....அம்மம்மா.... இருந்தாலும் பழகிடுச்சி. இந்த மாதிரி எரிச்சலுக்கு மத்தியில என் பாட்டி வீட்டுக்கு பின்னால அழகான சிவன் கோவில் இருக்கு. சாமிய பிடிக்குதோ இல்லயோ அந்த கோவிலோட கட்டிட அமைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். போன்னேரி சிவன் கோவில்ல இருந்து அடுத்த blog-ல பாக்கலாம்.

அப்புடன்,
கிச்சா.
www.zazendesigns.com