Monday, January 1, 2007

My First Visit

பொன்னெரின்னு சொன்னாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவதே அம்பிகா காப்பிதூள். என் அம்மாவுக்கு அம்பிகா காப்பின்னா உயிர் மாதிரி. பாட்டி கதையில வருமே. ஒரு ராட்சஷன் இருந்தானாம் அவன் உயிரு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு கிளியோட உடம்புல இருக்குன்னு.... அந்த மாதிரி எங்கம்மா உயிரு அம்பிகா காப்பி பொடியில இருக்குது. என் சின்ன வயசுல அம்மா காப்பிபொடி வாங்க பொன்னேரி அனுப்புவா. போயிட்டு வரவும், காபிதூள் வாங்கவும் மட்டும் தான் அம்மா பைசா தருவா. அதனால பைசாவ தொலச்சிட கூடாது கடவுலேன்னு வேண்டிக்குனே நேரா கடைக்கு போய் காப்பித்தூள் வாங்கிக்குனு வந்துடுவேன். அப்படி இப்படி திரும்பம வீட்டுக்கு வந்துடுவேன். சீக்கிரமே வந்துட்டயேடா சமத்துன்னு எங்கம்மா பாராட்டுவாங்க. என்னுடைய பயம் அவங்களுக்கு தெரிஙஞ்சிருக்க ஞாயம் இல்ல. பிறகு என்னுடைய பத்தவது படிப்பு முடிச்சவுடனே பொன்னேரி ஸ்கூல்ல admission கிடைத்தது. பிறகு தினமும் பொன்னேரி போய் படிச்சிட்டு வருவேன். அப்பதான் என் சின்ன பாட்டி பொன்னேரியில இருக்க விஷயமே தெரிஞ்சது. இங்கயே தங்கி படிடான்னு பாட்டி சொன்னாங்க. சரின்னு அங்கயே தங்கி படிக்க ஆரம்பமாச்சி. பொதுவா நான் கிராமத்து ஆளு.... டவுன் வாழ்கைய அனுசரிச்சி போக ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். எவ்ளோ வண்டிங்க, எவ்ளோ மக்கள், அதனால எழும்புற தூசு.....அம்மம்மா.... இருந்தாலும் பழகிடுச்சி. இந்த மாதிரி எரிச்சலுக்கு மத்தியில என் பாட்டி வீட்டுக்கு பின்னால அழகான சிவன் கோவில் இருக்கு. சாமிய பிடிக்குதோ இல்லயோ அந்த கோவிலோட கட்டிட அமைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். போன்னேரி சிவன் கோவில்ல இருந்து அடுத்த blog-ல பாக்கலாம்.

அப்புடன்,
கிச்சா.
www.zazendesigns.com

No comments: