Saturday, February 24, 2007

Vadaloor Vallalar

ஏந்த ஊயிர்களிடத்தும் பாராட்ட வேண்டிய இரக்கம், சீவகாருண்ய ஒழுக்கம், அன்பு போன்ற பிற நல்ல விஷயங்களை மக்களிடத்து எடுத்துரைத்த வல்லளாரின் தாய் வழி பூர்வீகம் சின்னக்காவனம். இந்த ஊர் பொன்னேரிக்கு மிக அருகிலுள்ளது. ஆனால் இது போன்ற ஒரு மகா ஜீவி வாழ்ந்த ஒரு சுவடு கூட இப்பொழுது அங்கு இல்லை என்பது மிக வருந்த வேண்டிய விஷயம். சிறிது காலம் பொன்னேரியில் வாழ்ந்த இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் எனும் சிற்றூரில் மடம் அமைத்து ஏழை எளியோரின் பசியாற அன்னதான ஏற்பாடு செய்தார். அன்று அவர் ஏற்றிய ஜோதி இன்று வரை அனையாமல் காக்கப்பட்டு வருகிறாது.

யார் ஒருவர் பொதுவாழ்க்கையில் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் எதிர்ப்பு வரும் என்பது இயற்கை. அது போலவே வல்லளாரின் வாழ்க்கையிலும் நடந்தது. அவரை எதிர்த்து, அவர் எழுதிய புத்தகத்திலுள்ள பிழையை எதிர்த்து ஒருவர் வழக்கு பதிவு செய்தார். வழக்கு மன்றத்திலிருந்து அவருக்கு சம்மன் வந்திருந்தது. சம்மனை உதாசீனம் செய்வார் என்று பலர் நினைத்தனர். ஆனால் குறித்த தேதியில் அவர் வழக்கு மன்றத்திற்க்கு சென்று வழக்கை சந்திக்க சாட்சிக் கூண்டின் அருகில் வரும் போதே வழக்கு தொடுத்தவர் எழுந்து நின்று வணக்கம் சொல்லி மரியாதை செய்தாராம். இதுபோல் எதிரியாக இருந்தாலும் கூட மறியாதை செய்யும் அளவிற்கு உத்தமராக வாழ்ந்தவர் அவர்.

இதேபோல் காந்தியடிகளின் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது. மகாத்மா வாழ்க்கையில் வழக்கு மன்றத்திற்கும் அங்கிருந்து சிறைச்சாலைக்கும் செல்வது வழக்கமான ஒன்று. அப்படி ஒருமுறை அவர் வழக்கு மன்றத்திற்கு சென்ற பொழுது வெள்ளைக்காற நீதிபதி மகாத்மாவிற்கு எழுந்து நின்று மறியாதை செய்தாராம். இதுபோல் வாழும் பொழுதே உச்சியைத் தொட்டவர்களின் ஆசிர்வாதத்துடன் வழ்க்கையில் மேலும் மேலும் செல்வோம்.

மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ணபிரபு.

1 comment:

VanisK said...
This comment has been removed by the author.